|
||||||||
இட்லி சாம்பார் (idli sambar) |
||||||||
தேவையானவை : துவரம்பருப்பு - 1/2 கப் பயத்தம்பருப்பு - 1/4 கப் சாம்பார் வெங்காயம் - 10 நறுக்கியது தக்காளி - 1நறுக்கியது புளி - தேவையான அளவு சாம்பார் பொடி - 2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது கொத்துமல்லித்தழை - சிறிது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் குக்கரில்துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, மஞ்சள்தூள்ஆகியவற்றைவேக வைத்துக் கொள்ளவும். 2 .ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். 3.வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். 4.பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி நன்றாகக்கொதித்தவுடன். 5.வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|