|
||||||||
பீன்ஸ் உசிலி (beans usili) |
||||||||
தேவையானவை: பீன்ஸ் - நறுக்கியது - ஒரு கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 3 வரை மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். 2.பின் அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 3.பிறகு அரைத்த விழுதை இட்லி தட்டில் வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். 4.நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். 5.ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். 6.பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். 7.கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|