|
||||||||
கத்தரிக்காய் பொரிக்கறி (birinjal pori curry) |
||||||||
தேவையானவை: கத்தரிக்காய் - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 4 உருண்டைக் கடலை - 1/2 டம்ளர் பழப்புளி - ஒரு எலுமிச்சைப்பழம் அளவு பால் - 1/2 டம்ளர் கறித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் காரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் எண்ணெய் - 400 மில்லி செய்முறை: 1.கடலையை முதல்நாள் இரவே ஊற வைத்துவிடவும். 2.கத்தரிக்காயை சிறிய அரைவட்டத் துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து 1 டீஸ்பூன் உப்பு போட்டு அதனுள் போடவும். 3.வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து வைக்கவும். பூண்டைத் தட்டி, தோல் நீக்கி வைக்கவும். 4.கத்தரிக்காயை மெதுவாக பிழிந்தெடுத்து, பொன்னிறமாகப் பொரித்து, அதேபோல் ஊறிய கடலையையும் பொரித்துகொள்ளவும். 5.அடுப்பில் பாத்திரத்தை வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.பின்பு பூண்டை வதக்கவும். 6.பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, கறித்தூளைப் போட்டு பிரட்டவும்.ஒரு டம்ளம் வெந்நீரில் புளியைக் கரைத்து, 1 டீஸ்பூன் உப்பும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 7.புளித்தண்ணீர் சூடாகியதும், பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.முதலில் கடலையைச் சேர்த்து 2 நிமிடம் பிரட்டவும். 8.பின்னர் பொரித்த கத்தரிக்காயைப் போட்டுப் பிரட்டவும்.நன்கு கிரேவி வற்றியதும். இறக்குவதற்கு முன் கரம் மசாலா போட்டு பிரட்டவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|