|
||||||||
வாழை சேனை எரிசேரி (valai senai erissery) |
||||||||
தேவையானவை: வாழைக்காய் – 2 சேனைக் கிழங்கு – 250 கிராம் நேந்திரங்காய் – 1 தேங்காய் – 1 புளி – சிறிய எலுமிச்சை அளவு மிளகு – 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணை – தேவையான அளவு கறிவேப்பிலை- சிறிது பச்சரிசி – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.முதலில் சேனைக் கிழங்கையும் வாழைக்காயையும் தோல்சீவி, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.பிறகு சேனையை கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் அரை வேக்காடு வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். 3.புளியைக் நீர்க்க கரைத்து அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், வாழைக்காய், பாதி வேகவைத்த சேனை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும். 4.மிளகை மிக மென்மையாக அரைத்து அத்துடன் சேர்க்கவும். 5.மிளகின் பச்சை நெடி அடங்கியதும், தேங்காய்த் துருவலில் பாதி, பச்சரிசி சேர்த்து நன்றாக அரைத்து, எரிசேரியில் சேர்க்கவும். 6.மீதிப் பாதி தேங்காய்த் துருவலை 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் நன்கு சிவக்க வறுத்து, சேர்த்துக் கொதிக்கவிட்டு, தளர்வான கூட்டு பதத்தில் இறக்கவும். 7.இறுதியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணணயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|