LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இமயமலை ஏறிய அப்பா-மகள்!

குர்கோன் பகுதியை சேர்ந்தவர் அஜித் பஜாஜ் (53) இவரது மகள் தியா (24) இருவரும் இமயமலையின் மீது, முதன் முதலாக  ஒன்றாக ஏறிய தந்தையும் - மகளும் என்ற பெருமையைப்  பெற்றுள்ளனர்.

தியா சிறுமியாக இருந்தபோதே தந்தையுடன் சேர்ந்தும் தனியாகவும் சாதனை புரிந்தவரே. அஜித் பஜாஜூம் பல சாதனைகளைப் புரிந்து பல விருகளைப் பெற்றவர்தான்.

30 ஆண்டுகளாக விளையாட்டுத் துறை சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற அஜித் பஜாஜ், வடதுருவம், தென் துருவம் மற்றும் கிரீன்லாண்ட் ஐஸ்கேப் ஆகியவற்றில்  ஸ்கேட்டிங் செய்து போலார் ட்ரிலாஜி என்ற விருது பெற்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவரது தந்தை முதன்முதலாக  அவரை இரவு முழுவதும் மலையேறும் பயிற்சிக்காக அழைத்துச் செல்வாராம்.

இதனால் மலையேறுவது அஜித்தின் வாழ்க்கையில் துணிச்சல்மிக்க விளையாட்டாக மாறியது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் முதன்முதலாக இமயமலை ஏறிய எட்மண்ட் ஹிலாரியை  சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகே, இவருக்கும் இமயமலை மீது ஏற வேண்டுமென்ற  எண்ணம் தோன்றியதால் அவரது மனைவி ஷெர்லியுடன் சேர்ந்து  ஸ்நோ லெப்பர்ட் என்ற துணிச்சல் மிக்க பயண சுற்றுலா நிறுவனமொன்றை  துவக்கினார்.  அந்த  நிறுவனத்தில்  தற்போது  தியாவும் இணைந்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆவது வயதில் டிரான்ஸ் கிரீன்லாண்ட்  ஸ்கேட்டிங்' அமைப்பில் மிகக் குறைந்த வயதுடைய உறுப்பினரானார்.

2012-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மிக உயரமான மலையாகக்  கருதப்படும் 5642 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மீது ஏறி சாதனை படைத்தார்.

இமயமலை மீது ஏறிய முதல் இந்தியர்கள் என்ற பெருமையை அஜித்தும்,  அவரது மகள் தியாவும் பெற்றனர்.  அங்கு நமது தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

by Swathi   on 13 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.