|
|||||
100 நாள் வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.336 ஆக உயர்வு |
|||||
மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில், "மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்பேரில் தமிழகத்தில் பயனாளிகளுக்கான தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று அந்த அரணையில் கூறப்பட்டுள்ளது.
|
|||||
| by hemavathi on 07 May 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|