இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீரங்கம் திருவடி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 94). ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளி பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜம்மாள்(வயது 86). நோய்வாய்ப்பட்டு இருந்த ராஜம்மாள் முதுமை காரணமாக இரவில் காலமானார். இவரது மறைவு கணவர் லட்சுமணன் மனதை வெகுவாகப் பாதித்தது.
மிகுந்த கவலையுடன் இருந்த லட்சுமணன் மனைவியின் உடலுக்கு அருகே அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அப்படியே மயங்கி லட்சுமணன் சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் அவரது உயிரும் பிரிந்தது. கணவனும் மனைவியும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இறந்த தம்பதியருக்கு 5 மகன்கள் உள்ளனர். இறப்பிலும் இணைபிரியாத அந்த தம்பதி உடல்கள் ஸ்ரீரங்கத்தில் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.
|