LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

2 ஜி விவகாரம் : கத்தி படத்திற்கு புதிய சிக்கல் !!

பல வழக்குகளையும், பிரச்சனைகளையும் தாண்டி கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம் இன்று வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


இந்நிலையில், தற்போது கத்தி திரைப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அந்த சிக்கல் என்னவென்றால், கத்தி படத்தில், விஜய் ஒரு காட்சியில் 2ஜி ஊழல் தொடர்பான வசனத்தை பயன்படுத்தியிருப்பதால், அதனை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இதன் முழு விவரம் பின்வருமாறு, 


இந்த வழக்கு தொடர்பாக நாகமலைப்புதுக்கோட்டை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 


கத்தி திரைப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் போது, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நிலுவையில் உள்ள, 2ஜி வழக்கு குறித்த வசனம் இடம் பெற்றிருந்தது. 


" 2ஜி என்றால் என்னன்னு தெரியுமா...? வெறும் காற்றை வைத்து கொள்ளையடித்தவர்கள் இருக்கும் ஊரு இது என்ற வசனம், இந்த நாட்டையும், நாட்டை ஆட்சி செய்தவர்களையும் கேவலமாக சித்தரித்துள்ளது. கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக, பல கோடி மக்கள் பார்க்கும் சினிமாவில் விஜய் யன்படுத்தியுள்ளார். 2ஜி வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப் படாத நிலையில், அதை குற்றமாக சித்தரித்து கோர்ட்டை அவமதித்து உள்ளனர். இந்தியாவை ஊழல் நாடாக சித்தரித்து, அன்னிய நாடுகள் உயர் தொழில்நுட்பத்தை, இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் சூழலை உருவாக்கியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 500ன் படி நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். . 


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

by Swathi   on 28 Oct 2014  0 Comments
Tags: 2 G Dialogue   2 ஜி வசனம் கத்தி   கத்தி   விஜய்           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.