ஆறாவது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி டேர் டெவில் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்யாசத்தில், மும்பை அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்று இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. அந்த அணி வீரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 73 ரன்களை குவித்தார். பின்னர் 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லியின் சேவாக், ஜெயவர்த்தனே ஜோடி அபாரமாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக டெல்லி டெவில்ஸ் 17 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து ரன்களை எடுத்து மும்பை அணியை வீழ்த்தியது. டெல்லி அணி வீரர் சேவாக் ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்தார்.
|