LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு : 4 பேருக்கும் தூக்கு !!!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 2.30 விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் குற்றம் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களுக்கு தூக்குத்தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார். 

 

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற தண்டனை குறித்த விவாதத்தின் போது, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும்படி நீதிபதியிடம் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

 

குற்றவாளிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி வாதிட்டார். டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி , ஓடும் பேருந்தில், ஆறு பேர் கொண்ட கும்பலால், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவ மனையில் உயிரிழ்ந்தார்.

 

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். எஞ்சிய நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.

by Swathi   on 13 Sep 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
13-Sep-2013 07:34:59 NIRMALRAJ said : Report Abuse
டெல்லி இன்செதேன்ட் இச் வெரி கரெக்ட் கம கொடூரர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும்..........
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.