தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.
திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெரியக்குப்பத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஷர்மிலி மற்றும் ராஜசேகர், சரண் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி போன்ற இடங்களில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
|