LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கீழடியில் வாழ்ந்த தொல்தமிழர் முகங்கள் வடிவமைப்பு

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டப் பொருள்கள், தங்கப் பொருட்கள் ,வேட்டைக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்கள், மரபுசார் கட்டிடக்கலை, யானை தந்ததால் செய்யப்பட்ட பொருள்கள் ,விரல் அளவு பானைகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், மண்பாண்டங்கள் ,முதுமக்கள் தாழிகள் ,சுடுமண் சிற்பங்கள் ,நாணயங்கள் ,தங்க அணிகலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அவை கீழடியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகமாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையுடன் இணைந்து  டிஎன்ஏ ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது கீழடி, கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3டி முக புனரமைப்பு முறையைப் பயன்படுத்தி, இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இவற்றை உருவாக்கியுள்ளனர். மண்டை ஓடுகளின் கீழ் தாடைகள் இல்லாததால், மண்டை அளவீடுகள் மற்றும் தளங்களிலிருந்து கீழ்த்தாடைகளின் வடிவங்களை மதிப்பிடுவதற்கு எலும்பியல் தரநிலைகளைப் பயன்படுத்தியதாக இந்நிறுவனத்தின் பேராசிரியர் வில்கின்சன் கூறினார்.

இது குறித்து காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை பேராசிரியர் ஜி.குமரேசன் கூறுகையில், "மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் படங்களைப் பெற்ற பிறகு, தசை, கொழுப்பு, மற்றும் தோலை மீண்டும் உருவாக்க மின்னிலக்கச் சிற்பத்தை உருவாக்கினோம். 80% அறிவியல், 20% கலைப்பூர்வமாக முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல் தேய்மான முறைகள், எலும்பு இணைவு கோடுகளின் வெளிப்பாடு, எலும்பின் பொதுவான அளவு போன்ற பல அளவுகோல்கள் ஒருவரின் வயதை நமக்குக் கூற முடியும்" என்று கூறினார்.

கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடுகள் சுமார் 50 வயதுடையவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.மேலும் கொந்தகையில் 11 எலும்புக்கூடுகளின் உயரத்தை மட்டுமே மதிப்பிட முடிந்தது. கொந்தகை மக்களின் உயரத்தை அளவிட இது போதுமானதாக இல்லாவிட்டாலும், ஆண்களின் சராசரி உயரம் 170.82 செ.மீ (5 அடி 7 அங்குலம்), பெண்களின் உயரம் 157.74 செ.மீ (5 அடி 2 அங்குலம்) என்று தெரியவந்து உள்ளது. மேலும் டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறியத் திட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். 

 

 

by hemavathi   on 29 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி  -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா
ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம் தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம்
உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல் உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.