இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு, நடப்பாண்டிற்கான ஐ.சி.சி., விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட், ஒருநாள் அணி தேர்வு செய்யப்படும். ஐ.சி.சி., சார்பிலான 2013ல் சிறந்த டெஸ்ட், ஒருநாள் வீரர்கள் அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் "ஆன்-லைன்' மூலம் தேர்வு செய்யும், "மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருதை இந்திய கேப்டன் தோனி தட்டிச்சென்றார். இதன் மூலம் இவ்விருதை வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுளார். இதற்கு சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 2010ல் இவ்விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..
நடப்பு ஆண்டின் "மக்களின் மனம் கவர்ந்த வீரர்' விருதுக்கான இறுதிப்பட்டிலில் இந்திய கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒரு வீரர்ரை தேர்வு செய்ய உலகிலுள்ள ரசிகர்கள் கடந்த நவ. 2 முதல் 23வரை ஓட்டுப் பதிவு செய்தனர். இதில் அதிக ஓட்டுகளை பெற்ற இந்திய கேப்டன் தோனி இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர, 2013 ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணிக்கு, தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து குக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
|