LOGO
  முதல் பக்கம்    சினிமா    தடம் பதித்தவர்கள் Print Friendly and PDF

தடம் பதித்த இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன் இவர் கே எஸ் ரவிகுமாரிடம் உதவியாளராக இருந்தவர் . ஆனால் அவருடைய பாணி எதையும் பின் பற்றாமல்- தனக்கான ஒரு பாணியை நிலை நிறுத்தி கொண்டவர் என்ற வகையில் இவர் தனித்து தெரிபவர்!

இவருடைய பாரதி கண்ணம்மா ,பொற்காலம் ,ஆட்டோ கிராப் , பாண்டவர் பூமி, வெற்றிக்கொடி கட்டு போன்றவை பரவலாக அனைவராலும் பாரட்ட பட்டவை ! இவர் பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம், இயக்குனராக உருவெடுத்தார் ,அந்த படமே நல்ல கதையமைப்பு கொண்ட படம். இப்படி அருமையான துவக்கத்தை கொண்ட இவர் பின்னாளில் அதிக படங்களை குறைந்த இடை வெளியில் தந்தார் . 

நடிகை பத்மபிரியாவுக்கு நல்ல அறிமுகமும் ராஜ் கிரண் பார்த்திபன் போன்றோருக்கு மறு பிரவேசத்திற்கும் வழி வகுத்தார். மேலும் பார்த்திபன் , வடிவேலு இணையை உருவாக்கி புதிய பாதையை நகைச்சுவையில் அளித்தார். பொற்காலம் படத்தில் மட்பாண்டம் செய்பவர்களின் ஏழ்மை நிலையை விளக்கிஇருப்பார். இதுவும் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம் வெற்றி கொடிகட்டுக்காக தேசிய விருது பெற்றார் மேலும் பிலிம் பேர் விருது போன்ற விருதுகளும் வாங்கியுள்ளார்.

பொதுவாக இவர் கதைகள் மிகவும் ரசிக்க தக்கவையாகவே இருக்கும் இவரின் முன்னோடிகளான பாக்கிய ராஜ் , விக்ரமன் போன்றோரின் கதைகளின் தாக்கம் இருக்கும். நடிகராக இவர் தங்கர் பச்சானின் சொல்லமறந்த கதையில் அறிமுகப்படுத்த பட்டார் . உண்மையில் சிறந்த கதையமைப்பை கொண்ட படம் என்பதால் இவருக்கு அது மிக நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பின் ,பிரிவோம் சந்திப்போம், யுத்தம் செய், முரண் ,சென்னையில் ஒருநாள் போன்ற வெளிப்படங்களிலும் ,ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து பொக்கிஷம் போன்ற தன்னோட படங்களிலும் நடித்தார் .

கதைகள் புதிததாக பிடிப்பதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை .

கிராமங்களை, கிராமியத்தை, தமிழ்நாட்டின் அழகை வேறு கோணத்தில் பார்க்கவைக்கும் சாதனை இயக்குநர் சேரன் தமிழுக்குக் கிடைத்த ஒரு சொத்து.

 

by Swathi   on 23 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.