உத்திர பிரதேசத்தில் பெண் ஐஏஎஸ். அதிகாரி துர்கா சக்தி நெக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து துர்கா சஸ்பெண்ட் விவகாரத்தில் நடந்த உண்மை நிலை குறித்த அறிக்கை கேட்டு , உத்திர பிரதேச மாநில அரசுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த, அம்மாநில சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் நிர்வாகத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சி பதிலளித்துள்ளது.
|