இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் இறப்பதாக தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007–ம் ஆண்டு முதல் 2012–ம் ஆண்டு வரை அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.
ஆண்டு வரதட்சணை கொடுமையால் இறந்த பெண்களின் எண்ணிக்கை
2007 8,093 2008 8,172 2009 8,383 2010 8,391 2011 8,618 2012 8,233
|