LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

இந்திய பொருளாதாரம் பற்றிய டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் கருத்துக்கள் !

இந்திய பொருளாதாரம்

 

     இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாம் 10 சதவீதத்தை எட்டி, அதை 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், நாம் வளர்ந்த இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் காண முடியும்.இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி விட்டது. நம் அன்னியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 300 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் குவிக்கின்றன. இந்தியாவில் வேலைக்கேற்ற தகுதி வாய்ந்த திறமையான மனித வளம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, அதே நிலையில் மேம்படுத்தி கொண்டு செல்லக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு எண்ணெய் தூர் வாரும் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கு இந்தியாவிலேயே அதற்குரிய மனிதவளம் கிடைக்கவில்லை என்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

     இந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.இந்தியாவினுடைய வேலைவாய்ப்பு திறன் கொண்ட மொத்த மனித வளம் 45 கோடி. அதில் வரன்முறை படுத்தப்பட்ட மனிதவளம் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் வரன்முறைபடுத்தப்படாத துறைகளிலிருந்து வருகிறது. இதில், விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வீட்டு வேலையாட்கள் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் என்று வளர வேண்டும் என்றால், விவசாயம் ஆண்டுக்கு நான்கு சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.

 

     விவசாயத் துறையில் குறைந்த வருவாயில் ஈடுபட்டுள்ள மனித வளம், மற்ற துறைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் அவர்களுக்கு தேவையான பயிற்சியும், தேவையான திறமையும் இல்லையென்றால், அவர்களால் எந்தத் துறையிலும் நுழைய முடியாது. இங்கு தான் சவால் ஆரம்பிக்கிறது.இதை சரி செய்வதற்கு அரசு, தனியார் துறைகள், தொழில் துறை, கல்வித்துறை, பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

 

இந்தியாவின் அடையாளமான விவசாயம் மறைந்து வருவதால் உணவு பிரச்னை ஏற்படுமா?

 

     விவசாயத்தை பாதுகாக்காவிட்டால் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. விவசாயத்திற்கான திட்டங்களை கொண்டு வந்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். உணவு பொருட்களை பதப்படுத்தும் முறையை கையாள வேண்டும். 

 

புவி வெப்ப மயமாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

 

     சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சம்பவங்களை தடுக்க வேண்டும். நாம் ஓட்டும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை கூட புவி வெப்பமயமாக காரணமாக உள்ளது. இதற்கு மாற்றாக மரம் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். 

 

விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

 

     நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் பறவை பறப்பதை பார்த்து அதிசயத்தேன். பறவையால் எப்படி பறக்க முடிகிறது என்பதை ஆசிரியரின் உதவியால் அறிந்தேன். அதன்பின், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் விட முயற்சியுடன் படித்து விஞ்ஞானி ஆனேன்.

 

சந்திரயான் விண்கல ஆய்வு பற்றி...

 

     சந்திரயான் விண்கலம், சந்திரனில் உள்ள நீர் மற்றும் கனிம வளம் பற்றி ஆய்வு செய்கிறது. இந்தியாவில் விவசாயம் செழிக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும்.

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்! செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்!
தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1    -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1 -இராம.கி
12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள் 12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள்
சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது..... சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....
விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும் விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும்
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.