LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டீ கடையில் டீ குடித்தவர் மீது, சந்தேக வழக்கு - மும்பை போலீசுக்கு உயர்நீதி மன்றம் கண்டனம் !!!

மும்பையில் டீ கடையில் டீ குடித்தவர் மீது, சந்தேக வழக்கு தொடர்ந்த, மும்பை போலீசாருக்கு உயர் நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி, 22ம் தேதி, காலை 11 மணியளவில், மும்பையை சேர்ந்த, விஜய் பாட்டீல், சிவாஜி பல்கலைக் கழகம் அருகேயுள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், விஜய் பாட்டீலை கைது செய்து, அவர் மீது, சந்தேகப்படும் வகையில்  டீ குடித்ததாகவும், அதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை என குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (சிஆர்பிசி) 151வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து, விஜய் பாட்டீல், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ‘போலீசார் என்னை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். என்னை காலை 11 மணிக்கு கைது செய்த போலீசார், குறிப்பேட்டில் மாலை 3.30க்கு கைது செய்ததாக பொய்யான தகவலை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மதிகாரி, ஜி.எஸ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. 

 

அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஜய் பாட்டீல் குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என ராஜாராம்புரி போலீஸ் நிலைய எஸ்.ஐ. ஜாதவ் கூறியுள்ளார். இன்னொரு குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன் அவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது, போலீசாரின் நடவடிக்கை அதிர்ச்சியாக உள்ளது. டீ குடிப்பதற்கு கூட விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் இதுவரை அறியவில்லை. ஒருவர் பல விதமாக டீ குடிக்கலாம். எல்லாரும் எப்போதும் நேர்த்தியாக டீ குடிக்க முடியாது. சிலர் உறிஞ்சி சத்தமாக டீ குடிக்கிறார்கள். ஆனால், சந்தேகப்படும் வகையில் ஒருவர் எப்படி டீ குடிக்க முடியும் என்பது புரியவில்லை. மனுதாரர் மீது ஏற்கனவே 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் ஒரு வழக்கு மட்டுமே ஆயுத சட்டப்பிரிவு வழக்கு. மற்றவை சூதாட்ட வழக்கு. பல வழக்குகளில் மனுதாரர் விடுதலையாகி இருக்கிறார். மற்றவை நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கூட குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. பழைய குற்ற வழக்குபின்னணிக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, விஜய் பாட்டீலுக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் 

என நீதிபதிகள் தெரிவித்தனர்.

by Swathi   on 20 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.