LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு

 

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள 8 கோட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2015 மார்ச் மாத நிலவரப்படி 1.44 லட்சம் பணியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு புதிதாகப் பணி நியமனம் செய்யப்படாததால், ஓய்வுபெற்றவர்கள் நீங்கலாகத் தற்போது 1.10 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.


புதிய நியமனம் குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழகச் சாலைப் போக்குவரத்து நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநர்,  நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, கோட்ட வாரியாக விழுப்புரம் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, திருநெல்வேலியில் 362 பணியிடங்கள் உள்ளன.


தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி: 2025 ஜூலை 1-ம் தேதி 24 வயது பூர்த்தியடைவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை, நடத்துநர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.


பணியில் சேர தகுதி, விருப்பம் உள்ளவர்கள் வங்கிச் சேவைக் கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தி மார்ச் 21-ம் தேதி (இன்று) முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும். ஏப்ரல் 21-ம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். எழுத்து, செய்முறைத் தேர்வுகள், நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு குறித்த விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும். 

 

 

by hemavathi   on 21 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.