நிலுவையில் உள்ள வழக்குகளால் நீதித் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
இந்திய இளையோர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நீதித் துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. குற்ற வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பிறகும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவில் வழக்குகளில் 2 அல்லது 3 தலைமுறைகளுக்குப் பிறகு, தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருத வேண்டும். நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கு திட்டமிட்டு வருகிறேன். விரைவில், அந்த யோசனையைத் தெரிவிப்பேன்.வழக்குகளை விரைந்து முடிக்க வழக்குரைஞர்கள், நீதிமன்ற அமர்வுகள் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார் ரஞ்சன் கோகோய்.
|