LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

ஏலாதி

 

கடவுள் வாழ்த்து
அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு.
நூல்
சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு. 1
கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும். 2
தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3
இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல், - காணின், கலவியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும். 4
தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;
எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை
போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்; -
சாலும், பிற நூலின் சார்பு. 5
நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,
பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,
வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும். 6
இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், -
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து. 7
உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து,
மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட
நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனை
யாக்குமவர் யாக்கும், அணைந்து. 8
கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை, இவை ஈந்தார் -
பண்டிதராய் வாழ்வார், பயின்று. 9
செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா
வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்
அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான். 10
அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின்
அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான் -
ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு,
போகும், புழையுள் புலந்து. 11
கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை,
அலைக் களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம்,
முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும், - இன்னவை
நச்சாமை, நோக்காமை, நன்று. 12
விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்ற
உளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை, -
நூல் பட்டு ஆர் பூங்கோதாய்! - நோக்கின், இவை ஆறும்
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு. 13
பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன
செய்யான், சிறியார் இனம் சேரான், வையான், -
கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும்
அயல, அயலவர் நூல். 14
கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்;
பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும்
சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும்
இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று. 15
துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல்,
இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார்,
மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல்,
இறுதல் இல் வாழ்வே இனிது. 16
குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம்,
மடி ஓம்பும், ஆற்றல் உடைமை, முடி ஓம்பி,
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்
தேற்றானேல், தேறும் அமைச்சு. 17
போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள்,
சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக்
கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை, காப்பின்,
அடும் கதம் இல், ஏனை அரசு. 18
கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல்
செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும்
மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, -
இறையில் பெரியாற்கு இவை. 19
மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான்,
கொன்னே வெகுளான், கொலை புரியான், - பொன்னே! -
உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின்
வெறுப்பு அறுத்தான், - விண்ணகத்தும் இல். 20
இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;
வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,
பாடே புரியாது, - பால் போலும் சொல்லினாய்!-
வீடே புரிதல் வீதி. 21
வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான்,
ஆள் அஞ்சான், ஆம் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக்
காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய
பாவின் நூல் எய்தப்படும். 22
குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்;
மணம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்; -
கால் காப்பு வேண்டான், - பெரியார் நூல் காலற்கு
வாய் காப்புக் கோடல் வனப்பு. 23
பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,
தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின்,
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்
நிரம்புமேல், வீட்டு நெறி. 24
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். 25
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை,
ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த
காலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ். 26
அஃகு, நீ, செய்யல், எனஅறிந்து, ஆராய்ந்தும்,
வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான்,
கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர்! 27
மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்! -
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; - பொய்யே,
குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும்
மறலையின் வாயினவாம், மற்று. 28
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா,
கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை; அலை அளவி,
மை என நீள் கண்ணாய்! - மறுதலைய இம் மூன்றும்
மெய் அளவு ஆக விதி! 29
மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப்
பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால், - பூண்ட
ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,
கிரிதன், பௌநற்பவன், பேர். 30
மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த்
தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி
புத்ரன் அபவித்தனொடு, பொய் இல் உருகிருதன்,
இத் திறத்த, - எஞ்சினார் பேர். 31
உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை
உரையான்; பொருளொடு, வாழ்வு, ஆயு, உரையானாய், -
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்! - ஈத்து உண்பான்
தேவாதி தேவனாத் தேறு! 32
பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,
மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான், -
கூந்தல் மயில் அன்னாய்! - குழீஇய வான் விண்ணோர்க்கு
வேந்தனாம் இவ் உலகம் விட்டு. 33
சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான்,
இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக்
கூடுவது ஈவானை, - கொவ்வைபோல் செவ் வாயாய்! -
நாடுவர், விண்ணோர், நயந்து. 34
துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது
இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும், -
பண் ஆளும் சொல்லாய்! - பழி இல் ஊண் பாற்படுத்தான்,
மண் ஆளும், மன்னாய் மற்று. 35
கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும்
பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால்
வீழப்படுவார், விரைந்து. 36
அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான்,
என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே இருத்தல் குறை. 37
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை சால உணர்வார் பெருந் தவம்
போகாமை, சாலப் புலை. 38
சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்
சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்
வேறல் எளிது; அரிது, சொல். 39
உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை
அலையாமை ஐயப்படாமை, நிலையாமை
தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான்,
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. 40
குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய்
மறுகான்; பிறர் பொருள் வெளவான்; இறுகானாய்,
ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள்
பாடு இறப்ப, பன்னும் இடத்து. 41
கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. 42
சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ்
வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
தான் மகர வாய் மாடத்தான். 43
பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும்
வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே
ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ் மண் அரசாய்ப்
பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு. 44
இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து. 45
களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,
ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை
எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. 46
பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று,
பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல்
தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் -
மாறான், மண் ஆளுமாம் மற்று. 47
வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,
வாளால் மண் ஆண்டு வரும். 48
யானை, குதிரை, பொன், கன்னியே, ஆணிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால்
எண்ணன் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான் - வைசிர-
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து. 49
எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றோடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான் - துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து. 50
உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,
தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர
பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,
கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. 51
இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. 52
கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று. 53
பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,
கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு,
பண்டாரம் பற்ற வாழ்வார். 54
'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,
மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று,
ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்-
காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. 55
தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர்,
உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய் -
மா அலந்த நோக்கினாய்! - ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ்
நாவலம்தீவு ஆள்வாரே, நன்கு. 56
கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும்
பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம்
ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் - அரசராய்ப்
போற்றி ஊண் உண்பார், புரந்து. 57
காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார்,
ஆம் ஆடார், ஆயந்தார் நெறி நின்று, தாம் ஆடாது,
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான்
மாற்றாரை மாற்றி வாழ்வார். 58
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. 59
பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம்,
அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்,
பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்,
சாபம்போல் சாரும், சலித்து. 60
ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால்,
ஒர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா
மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே -
ஊனமே தீர்ந்தவர் ஒத்து. 61
கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,
ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,
இழுக்கம் இழவும் தரும். 62
ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்,
பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு
கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார், விரிந்து. 63
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
பெருந் தவம் செய்தார், பெரிது. 64
காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த
பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா,
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின்,
ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து. 65
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று. 66
கூர் அம்பு, வெம் மணல் ஈர் மணி, தூங்கலும்,
ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து,
அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார் -
இழி கதி, இம் முறையான் ஏழு. 67
சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
மென்புடையார் வைத்தார், விரித்து. 68
எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் -
வேறு தொழிலாய் விரித்து. 69
ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை,
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும்
வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே,
ஈனமே இன்றி இனிது. 70
நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்,
கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான் -
தான் அகத்தே வாழ்வான், தக. 71
உணராமையால் குற்றம்; ஒத்தான் வினை ஆம்;
உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத
தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான்
மண்டிலமும் ஆகும்; மதி. 72
மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட
வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை
பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல்
பற்றுதல், பாத்து இல் தவம். 73
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. 74
அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி,
மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின்
மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே -
ஆசாரியனது அமைவு. 75
ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்!
வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,
கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;
அடையாத் தவத்தினால் வீடு. 76
நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான்,
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின்
எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ்,
வல்லை வீடு ஆகும்; வகு! 77
தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; -
வைத்து வழங்கி வாழ்வார். 78
சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட,
நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு
அட்டார்வாய்ப் பட்டது பண்பு. 79
புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல்
நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு
ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார் - மன்னராய்க் -
காண் கொடுத்து வாழ்வார், கலந்து. 80
சிறப்புப் பாயிரம்
இல்லற நூல்; ஏற்ற துறவற நூல், ஏயுங்கால்,
சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்ல
அணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான், கலந்து.
ஏலாதி முற்றும்.


கடவுள் வாழ்த்து

அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்குஇறை புரிந்து வாழ்தல் இயல்பு.

நூல்

சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்வழிவந்தார்கண்ணே வனப்பு. 1
கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்தஅலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!-விண்ணவர்க்கும் மேலாய்விடும். 2
தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலாஇன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்துன்பம் துடைத்தல் அரிது. 3
இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,கண்டவர் காமுறும் சொல், - காணின், கலவியின்கண்விண்டவர் நூல் வேண்டாவிடும். 4
தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றைபோலும் இழையார் சொல் தேறான்; களியானேல்; -சாலும், பிற நூலின் சார்பு. 5
நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும்தாய் அன்னன் என்னத் தகும். 6
இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், -முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து. 7
உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து,மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் படநோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனையாக்குமவர் யாக்கும், அணைந்து. 8
கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்குஉண்டி, உறையுள், உடுக்கை, இவை ஈந்தார் -பண்டிதராய் வாழ்வார், பயின்று. 9
செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலாவெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்றஎனைத்தும் அறியாமையான். 10
அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின்அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான் -ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு,போகும், புழையுள் புலந்து. 11
கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை,அலைக் களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம்,முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும், - இன்னவைநச்சாமை, நோக்காமை, நன்று. 12
விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்றஉளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை, -நூல் பட்டு ஆர் பூங்கோதாய்! - நோக்கின், இவை ஆறும்பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு. 13
பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயனசெய்யான், சிறியார் இனம் சேரான், வையான், -கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும்அயல, அயலவர் நூல். 14
கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்;பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும்சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும்இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று. 15
துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல்,இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார்,மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல்,இறுதல் இல் வாழ்வே இனிது. 16
குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம்,மடி ஓம்பும், ஆற்றல் உடைமை, முடி ஓம்பி,நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்தேற்றானேல், தேறும் அமைச்சு. 17
போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள்,சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக்கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை, காப்பின்,அடும் கதம் இல், ஏனை அரசு. 18
கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல்செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும்மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, -இறையில் பெரியாற்கு இவை. 19
மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான்,கொன்னே வெகுளான், கொலை புரியான், - பொன்னே! -உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின்வெறுப்பு அறுத்தான், - விண்ணகத்தும் இல். 20
இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,பாடே புரியாது, - பால் போலும் சொல்லினாய்!-வீடே புரிதல் வீதி. 21
வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான்,ஆள் அஞ்சான், ஆம் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக்காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்தியபாவின் நூல் எய்தப்படும். 22
குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்;மணம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்; -கால் காப்பு வேண்டான், - பெரியார் நூல் காலற்குவாய் காப்புக் கோடல் வனப்பு. 23
பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின்,அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்நிரம்புமேல், வீட்டு நெறி. 24
பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,தீர்ந்தாற்போல் தீரா வரும். 25
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை,ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்தகாலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்குஞாலம் அறிந்த புகழ். 26
அஃகு, நீ, செய்யல், எனஅறிந்து, ஆராய்ந்தும்,வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான்,கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும்உள்ளத்த ஆக உணர்! 27
மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்! -மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; - பொய்யே,குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும்மறலையின் வாயினவாம், மற்று. 28
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா,கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை; அலை அளவி,மை என நீள் கண்ணாய்! - மறுதலைய இம் மூன்றும்மெய் அளவு ஆக விதி! 29
மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப்பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால், - பூண்டஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,கிரிதன், பௌநற்பவன், பேர். 30
மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த்தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரிபுத்ரன் அபவித்தனொடு, பொய் இல் உருகிருதன்,இத் திறத்த, - எஞ்சினார் பேர். 31
உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரைஉரையான்; பொருளொடு, வாழ்வு, ஆயு, உரையானாய், -பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்! - ஈத்து உண்பான்தேவாதி தேவனாத் தேறு! 32
பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான், -கூந்தல் மயில் அன்னாய்! - குழீஇய வான் விண்ணோர்க்குவேந்தனாம் இவ் உலகம் விட்டு. 33
சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான்,இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக்கூடுவது ஈவானை, - கொவ்வைபோல் செவ் வாயாய்! -நாடுவர், விண்ணோர், நயந்து. 34
துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாதுஇறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும், -பண் ஆளும் சொல்லாய்! - பழி இல் ஊண் பாற்படுத்தான்,மண் ஆளும், மன்னாய் மற்று. 35
கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும்பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும்ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால்வீழப்படுவார், விரைந்து. 36
அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான்,எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான்,என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான்,கொன்னே இருத்தல் குறை. 37
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்திவழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,நேராமை சால உணர்வார் பெருந் தவம்போகாமை, சாலப் புலை. 38
சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லதுமேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்வேறல் எளிது; அரிது, சொல். 39
உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரைஅலையாமை ஐயப்படாமை, நிலையாமைதீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான்,நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. 40
குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய்மறுகான்; பிறர் பொருள் வெளவான்; இறுகானாய்,ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள்பாடு இறப்ப, பன்னும் இடத்து. 41
கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறிஅடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. 42
சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ்வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்-தான் மகர வாய் மாடத்தான். 43
பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும்வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதேஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ் மண் அரசாய்ப்பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு. 44
இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டுவெல்வான் விடுப்பான் விரைந்து. 45
களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரைஎள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டுகொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. 46
பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று,பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல்தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் -மாறான், மண் ஆளுமாம் மற்று. 47
வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,வாளால் மண் ஆண்டு வரும். 48
யானை, குதிரை, பொன், கன்னியே, ஆணிரையோடுஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால்எண்ணன் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான் - வைசிர-வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து. 49
எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,வள்ளே, துணியே, இவற்றோடு, கொள் என,அன்புற்று, அசனம் கொடுத்தான் - துணையினோடுஇன்புற்று வாழ்வான், இயைந்து. 50
உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீரபாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. 51
இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய்,எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. 52
கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்படையராய் வாழ்வார், பயின்று. 53
பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பாலநிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு,பண்டாரம் பற்ற வாழ்வார். 54
'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று,ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்-காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. 55
தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர்,உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய் -மா அலந்த நோக்கினாய்! - ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ்நாவலம்தீவு ஆள்வாரே, நன்கு. 56
கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும்பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம்ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் - அரசராய்ப்போற்றி ஊண் உண்பார், புரந்து. 57
காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார்,ஆம் ஆடார், ஆயந்தார் நெறி நின்று, தாம் ஆடாது,ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான்மாற்றாரை மாற்றி வாழ்வார். 58
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கியபால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. 59
பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம்,அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்,பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்,சாபம்போல் சாரும், சலித்து. 60
ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால்,ஒர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலாமானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே -ஊனமே தீர்ந்தவர் ஒத்து. 61
கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,இழுக்கம் இழவும் தரும். 62
ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்,பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடுகேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான்வேட்டு எழுத வாழ்வார், விரிந்து. 63
உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -பெருந் தவம் செய்தார், பெரிது. 64
காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்தபாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா,ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின்,ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து. 65
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்தமை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர்சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;இடர் இன்று; இனி துயிலும் இன்று. 66
கூர் அம்பு, வெம் மணல் ஈர் மணி, தூங்கலும்,ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து,அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார் -இழி கதி, இம் முறையான் ஏழு. 67
சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,மென்புடையார் வைத்தார், விரித்து. 68
எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர்ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் -வேறு தொழிலாய் விரித்து. 69
ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை,ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும்வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே,ஈனமே இன்றி இனிது. 70
நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்,கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்தவானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான் -தான் அகத்தே வாழ்வான், தக. 71
உணராமையால் குற்றம்; ஒத்தான் வினை ஆம்;உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராததொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான்மண்டிலமும் ஆகும்; மதி. 72
மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்டவினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கைபற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல்பற்றுதல், பாத்து இல் தவம். 73
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடுஎழுத்தின் வனப்பே வனப்பு. 74
அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி,மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின்மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே -ஆசாரியனது அமைவு. 75
ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்!வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;அடையாத் தவத்தினால் வீடு. 76
நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான்,பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின்எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ்,வல்லை வீடு ஆகும்; வகு! 77
தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; -வைத்து வழங்கி வாழ்வார். 78
சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட,நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்புஅட்டார்வாய்ப் பட்டது பண்பு. 79
புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல்நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்குஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார் - மன்னராய்க் -காண் கொடுத்து வாழ்வார், கலந்து. 80

சிறப்புப் பாயிரம்

இல்லற நூல்; ஏற்ற துறவற நூல், ஏயுங்கால்,சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்லஅணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும்கணிமேதை செய்தான், கலந்து.

ஏலாதி முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
31-Jan-2016 04:25:15 ர.Narayanasamy said : Report Abuse
இந்த கருத்தக்களை படித்தால் வெற்றி தருமா தேர்வில் இதில் தவறான பதில் உள்ளதா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.