அமெரிக்க நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய, முன்னால் அமெரிக்க சி.ஐ.ஏ வின் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென் நேற்று ரஷ்யாவிலிருந்து கியூபா சென்றுள்ளார். இவர் மீது அரசு ஆவணங்களை உளவு பார்த்தல் மற்றும் திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கடந்த வாரம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து ஹாங்காங்கில் தங்கியிருந்த ஸ்னோடென், நேற்றுமுன்தினம் ரஷ்யாவுக்கு ரகசியமாகச் சென்றார். மேலும் ரஷ்யாவிலிருந்து அவர் நேற்று விமானம் மூலம் கியூபா நாட்டின் ஹவானா நகரை சென்றடைந்தார். தற்போது, அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தஞ்சம் அடைய வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக ஈக்வடார் நாடு தெரிவித்துள்ளது.
|