|
||||||||
இலை அடை (elai adai) |
||||||||
தேவையானவை :- இட்லி அரிசி - 2 ஆழாக்கு துருவிய தேங்காய் - 1 கப் தூள் வெல்லம் - 1/2 கப் உப்பு - 1 சிட்டிகை வாழை இலை - 2 செய்முறை :- 1.முதலில் அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நன்கு மசிய அரைக்கவும். 2.பிறகு ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். 3.தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். 4.அடுத்ததாக இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லியதாக தட்டவும். பிறகு அதில் தேங்காய் வெல்லக் கலவையை வைத்து ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|