புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சிமா முனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் இளங்கோவனுக்கு, தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 2024-ம் ஆண்டிற்கான நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு முனைவர் இளங்கோவனுக்கு 'நற்றமிழ்ப் பாவலர்' விருது, ரூ. 50 ஆயிரம், தங்கப்பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.
பேராசிரியர் இளங்கோவன் இணைய ஆற்றுப்படை, மாணவராற்றுப்படை, அச்சக ஆற்றுப்படை, அரங்கேறும் சிலம்புகள், மணல்மேட்டு மழலைகள் உள்ளிட்ட மரபுக் கவிதை நுால்களை நல்ல தமிழில் எழுதியுள்ள முயற்சியைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
|