LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னையில் வரும் ஜனவரியில் ‘உமாஜின் 2023’ சர்வதேச தொழில்நுட்ப மாநாடு

 

சென்னையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ‘உமாஜின் 2023’ என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடு கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ‘உமாஜின் 2024’ நடப்பாண்டில் நடைபெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மூன்றாம் முறையாக ‘உமாஜின் 2025’ சர்வதேச தொழில்நுட்ப மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.


இது தொடர்பாகத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளியிட்ட பதிவில்: "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி தமிழகத்தைத் தயார்ப்படுத்த, உலக அளவிலான  தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கொள்கை  வகுப்பாளர்கள், முன்னணித் தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் சார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள் என அனைவரையும் ‘உமாஜின்’ தொழில்நுட்ப மாநாடு ஒன்றிணைத்து வருகிறது. ‘உமாஜின்’ மாநாட்டின் கடந்த பதிப்பானது மிகப் பெரிய வெற்றியை பெற்றது.


2024-ல் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்குபெற 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 163 பேச்சாளர்கள் கலந்து கொண்டு 60 வெவ்வேறு அமர்வுகளில் உரையாற்றினர். அதன் தொடர்ச்சியாக ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் மூலம் சமமான வளர்ச்சியை இயக்குதல்’ என்ற கருப்பொருளில் ‘உமாஜின் சென்னை 2025’ தொழில்நுட்ப மாநாடு வரும் 2025 ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.


இந்த மாநாடானது செயற்கை நுண்ணறிவு மூலம் அனைத்துத் துறைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான கண்டுபிடிப்புகளுக்காகத் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தை ஒன்றிணைத்துச் செயல்பட வாய்ப்புகளை வழங்குகிறது. பொதுக் கொள்கை, நிலைத் தன்மை, பொருளாதார மாற்றம் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் சமப் பங்களிப்பை உறுதிபடுத்தும் இந்த மாநாடு தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

 

by hemavathi   on 04 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருச்சி-சென்னை  புதிய விமானச் சேவை அறிமுகம் திருச்சி-சென்னை புதிய விமானச் சேவை அறிமுகம்
விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்த 2--ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு
அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர்  இரமேஷ் காலமானார் அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர் இரமேஷ் காலமானார்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல்
மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய்
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.