நடைபெற இருக்கும் நாடாளமன்ற தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் லோக் சபா தேர்தல் ஒன்பது கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி துவங்கி மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளது. தற்போது காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்களிக்கும் நேரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்களிப்போர்களின் எண்ணி்க்கை அதிகரித்து காணப்படுவதாலும், தேர்தல் நேரம் கோடை காலமாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதற்கு மாலை நேரத்தை தான் தேர்ந்தெடுப்பர் என்ற நோக்கத்தி்ன் அடிப்படையிலும் கூடுதல் நேரத்தை வழங்கியுள்ளதாகவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருப்பது, வாக்கு பதிவின் சதவீதம் அதிகரித்திருப்பது போன்றவை காரணங்களாக கருத்தி்ல கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் கமிசன் அறிவித்துள்ளது. மேலும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்துவிடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|