நடக்கவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் விரிவாக கூறும் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சட்டத்தின் இருப்பிடமாகும். அதன் உத்தரவை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக நிறைவேற்றும். குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முறையாக பின்பற்றப்படும் . மேலும் சத்தீஸ்கரை தொடர்ந்து மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும் சம்பத் தெரிவித்தார்.
|