LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 806 - நட்பியல்

Next Kural >

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு
தேவநேயப் பாவாணர் உரை:
எல்லைக்கண் நின்றார்-நட்புவரம்பு கடவாது. அதன் எல்லைக்குள் நிலைத்து நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு-பழைமையைத் தம்மோடு பழகிவந்து துன்பில் திரியாது நின்றவரின் நட்பை; தொலைவிடத்தும் துறவார்-அவரால் தமக்குக் கேடுவந்தவிடத்தும் விடார். 'தொல்லை' ஆகுபொருளி, 'தொலைவு' பொருட்கேடும் போர்த்தோல்வியும்.
கலைஞர் உரை:
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
Translation
Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends.
Explanation
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
Transliteration
Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum Thollaikkan Nindraar Thotarpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >