LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 1 குறளோடு உறவாடு– அஷ்ராஃப் குன்ஹூனு - பிற மொழிகளில் திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க குறளோடு உறவாடு அஷ்ராஃப் குன்ஹூனு

அறிமுகம்:

    திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்களின் தாய்மொழி மலையாளம் ஆகும். பிறந்து வளர்ந்தது அனைத்தும் திருச்சியிலே. கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். தன்னுடைய 37 வயதுவரை திருக்குறள் மீது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஆர்வமே இவருக்கும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிடித்த குறள்:

    திருக்குறளை ஏன் திருக்குரானுக்கு ஈடாக வைத்துப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியது. அறநெறி வாழ்வியலுக்கு ஊன்றுகோல் ‘திருக்குறள்’ என நினைத்தார். இவருக்கு பிடித்தமான குறள் என்று கேட்கும் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் பிடிப்பதாகக் கூறுகிறார்.

‘நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்று நிலை’

என்ற குறள் தற்போது மிக பிடித்தமான குறள் என்று கூறுகிறார். மேலும் இவருக்கு பிடித்தமான அதிகாரம் என்று கூறும் போது ‘கண்ணோட்டம்’ என்ற அதிகாரம் இவருக்கு எப்போதும் பிடித்தமான அதிகாரம் என்று குறிப்பிடுகிறார். இந்த அதிகாரத்தில் கூறப்பட்ட குறட்பாக்கள் அனைத்தும் எல்லா நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்தியவை. உளவியல் நோக்கில் படைக்கப்பட்டவை எனவும் திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறினார்.

திருக்குறளில் எண்களின் அதிசயம்:

    ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப..’ என்றார் திருவள்ளுவர். திருக்குறளில் எண்களின் அதிசயத்தைக் காண முடியுமா எனத் திரு அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் விழைந்தார். தொடர் முயற்சியின் பலனாகத் திருக்குறளில் எண்களின் அதிசயத்தையும் கண்டறிந்தார். திருக்குறளில் ஒரே சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் ஆய்வு மேற்கொண்டார். எந்த எண் திருக்குறளில் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது என்பதிலும் கவனம் கொண்டார். அவற்றைக் கண்டும் பிடித்தார்.

தென்காசி திருக்குறள் கழகம்:

    திருக்குறளில் இவ்வாறாகக் கணித ஆராய்ச்சியை மேற்கொண்ட போதே அதன் நீதிக் கருத்துக்களின் மேல் ஆர்வம் கொண்டார். 1927ல் தொடங்கப்பட்ட தென்காசி திருக்குறள் கழகத்தில் முதன்முதலில் ‘பவர் பாயின்ட்’ மூலமாக ஆய்வினை சமர்ப்பித்தார்.

    இவர் திருக்குறளைப் பெரும்பான்மையான மொழிகளில் தட்டச்சு செய்து வெளியிட இவருடைய குடும்ப உறவினர்களும் உதவியதாகக் குறிப்பிடுகிறார். இவர் திருக்குறளுக்கு ஆற்றிய இந்த பணியானது மிகப்பெரும் சேவையாகப் போற்றப்படுகிறது.

by Lakshmi G   on 04 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.