LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க : 3 - குறலோடு உறவாடு -திரு. சி். பன்னீர் செல்வம்- வள்ளுவரை வழிபட வழிபட நாம் வள்ளுவரின் வழிப்படுவோம்

எனைத்தானும் நல்லவை கேட்க : 3 - குறலோடு உறவாடு -திரு. சி். பன்னீர் செல்வம்- வள்ளுவரை வழிபட வழிபட நாம் வள்ளுவரின் வழிப்படுவோம் 

திருக்குறள் ஆர்வம்:

    திரு. சி. பன்னீர் செல்வம் அவர்கள் பள்ளியில் படித்த போதே அவருக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களால் தமிழ் ஆர்வமும், திருக்குறள் ஆர்வமும் வளர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் தமிழ் தெரியாத மலையாளி ஒருவர் திருக்குறளையும், திருவள்ளுவரையும் வழிபடுகிறார் என்ற செய்தி தினமணியில் வெளியானதைத் தொடர்ந்து அவரை நேரில் சென்று கண்டு திருக்குறளில் இவரும் மிகுந்த ஈடுபாடுக் கொண்டதாகத் திரு. சி. பன்னீர் செல்வம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

திருக்குறள் பணிகள்:

    திரு. சி. பன்னீர் செல்வம் அவர்கள் அரசு அதிகாரியாகவும் இருந்தக் காரணத்தினால் அவரால் மக்களிடையே திருக்குறளைச் சென்று சேர்க்கும் பணியை எளிதாக மேற்கொள்ள முடிந்ததாகக் குறிப்பிடுகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்குத் திருக்குறள் கற்றுக் கொடுப்பது, கூட்டம் கூட்டி மக்களிடையே திருவள்ளுவரைச் சென்று சேர்ப்பது என்று பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரை 15 ஊர்களில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்துள்ளார். திருவள்ளுவர் உருவம் பதித்த வெண்கல விளக்கு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ‘குறள் சாரல்’ என்ற இதழை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறார்.

இயற்றிய நூல்கள்:

    வணக்கத்திற்குரிய வள்ளுவர், திருக்குறள் ஏன் மக்கள் .இயக்கமாக மாற வேண்டும்?, திருக்குறள் மறையா? போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மறை என்றால் இது ஓதப்பட வேண்டும். திருக்குறள் போற்றப்பட வேண்டிய நூல், ஓதப்பட வேண்டிய நூல் அல்ல என்று கூறுகிறார்.

    குழந்தைகளுக்கு எந்தவொரு செய்யுளைக் கற்பித்தாலும் அதை ஆடல், பாடலாகக் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். திருக்குறளைப் பாடலாகக் குழந்தைகளிடையே கற்பிப்பதாகக் குறிப்பிடுகிறார்.

பிடித்த குறள்:

‘அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

  தம்நோய்போல் போற்றாக் கடை’

பிறனொருவன் படுகின்ற துன்பத்தைப் பார்த்து வேடிக்கை பார்க்கின்ற ‘அறிவு’ இருந்தும் பயனில்லை என்ற அர்த்தம் தருகின்ற இந்த குறளே இவருக்கு பிடித்தமான குறளாகக் குறிப்பிடுகிறார். திருக்குறளுக்கென தினசரி நடவடிக்கை வேண்டும், திருக்குறள் செல்ல வேண்டிய தூரம் அதிகம், வள்ளுவரை வழிபட வழிபட நாம் வள்ளுவரின் வழிப்படுவோம். திருக்குறள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். திருக்குறளுக்கென நாம் செய்ய வேண்டிய பணிகளும் ஏராளம் என்று கூறுகிறார்.

by Lakshmi G   on 16 Oct 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.