LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 2 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி  (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)  -திருக்குறள் உலகம் தழுவிய நூல்

எனைத்தானும் நல்லவை கேட்க 16 – குறளோடு உறவாடு

வள்ளுவம் வகுத்த வாழ்க்கைப்பயணம் – பகுதி -2

- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

அனைவருக்கும் திருக்குறள்:

     திருக்குறள் அனைவருக்கும் ஏற்றது. தனிமனிதன், குடும்ப மனிதன், சமூக மனிதன், அரசியல்வாதி, ஆன்மீக மனிதன் என அனைவருக்கும் தேவையான அனைத்தையும் கூறுவது. பாமர மனிதனுக்கும் படித்தவர்களுக்கும் இணையாக அறங்களைக் கூறுகிறது. எந்தத் தொழிலைச் செய்பவர்க்கும், எத்தனை மேலதிகாரத்தில் இருப்பவருக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்து அறங்களையும் திருக்குறள் கூறியிருக்கிறது. எனவே, உலகத்திற்கே ஏற்ற ஒரு இலக்கியம் உண்டென்றால் அது திருக்குறள் என்கிறார் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள்.

திருக்குறள் தாக்கம் இல்லாத இலக்கியம்:

     திருக்குறள் காலத்தால் முந்தியது; திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் இன்று வரை எழுதப்படவில்லை. திருக்குறளின் தாக்கம் இல்லாமல் எந்தவொரு இலக்கியமும் இல்லை என்று கூறலாம். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் என அனைத்திலும் திருக்குறளின் தாக்கம் உள்ளது என்கிறார் பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்கள். 

“பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க 

 நாகரிகம் வேண்டு பவர்” என்கிறது திருக்குறள்.

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

 நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” – என்கிறது நற்றிணை.

 

“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

 வீடில்லை நட்பாள் பவர்க்கு” என்கிறது திருக்குறள்.

“நாடி நட்பின் அல்லது    

 நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!” என்கிறது நற்றிணை.

 

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

 சான்றோன் எனக்கேட்ட தாய்” என்கிறது திருக்குறள்.

“ஈன்ற ஞான்றியும் பெரிது உவந்ததனளே!”  என்கிறது புறநானூறு.

     திருக்குறள் கூறுகின்ற கருத்துக்களையே இலக்கியங்களும் கையாண்டுள்ளன. இதனையறிந்தே வ.சு.ப. மாணிக்கனார் அவர்கள், “திருக்குறள் நீர் பாயாத இலக்கிய வயலே இல்லை” என்கிறார்.

முக்கியமான மூன்று இலக்கியங்கள்:

     மனிதனுக்கு மிக முக்கியமான இலக்கியங்கள் மூன்று என்கிறார் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள். பாலி மொழியில் எழுதப்பட்ட தர்மபதம் -. இது பௌத்தர்களுக்குரியது. 2. பகவத் கீதை – இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இது வைதீகர்களுக்குரியது. 3. திருக்குறள் – இது தமிழில் எழுதப்பட்டது. உலகில் உள்ள அனைவருக்கும் உரியது. இவையே மூன்று முக்கியமான நூல்கள் ஆகுத். இதில் உலகில் உள்ள அனைவருக்கும் உரியதான திருக்குறளானது தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள்.

குற்றங்களுக்குக் காரணம்:

     மனிதன் தன்னுடைய தேவைகள் தீர்ந்த பிறகும்; குற்றம் செய்வதற்கான காரணம் அவனது வேட்கையே ஆகும். இது நேற்றோ இன்றோ வந்ததல்ல. சிறிது சிறிதாக வளர்ந்து இன்று சமூகத்திடையே புரையோடிப் போய் விட்டது. இது போன்ற குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனில் மிகப்பெரிய சமுதாய புரட்சி ஏற்பட வேண்டும். மிகப்பெரிய சமுதாய புரட்சி ஏற்பட்டாலொழிய இது போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார்.

திருக்குறள் பணிகள்:

     பேராசிரியர் சோ.ந. கந்தசாமி அவர்கள் திருக்குறளின் அறத்துப்பாலுக்கு ஆராய்ச்சி தெளிவுரை எழுதியிருக்கிறார்; பொருட்பாலுக்கு இரண்டு பாகம் ஆராய்ச்சி தெளிவுரை எழுதியிருக்கிறார். இதுவரை தனக்கு ஆசிரியர் கற்பித்ததை தான் மக்களுக்கு எடுத்துரைப்பதாகக் கூறுகிறார். இன்னும் திருக்குறளுக்கும், இலக்கியத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது என்றும், அவற்றையெல்லாம் செய்ய இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டுகிறார்.

by Lakshmi G   on 28 Apr 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.