பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் எந்திரன் 2 (2.0). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படபிடிப்பு, தற்போது டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதில் அக்ஷய் குமார் பங்கேற்று நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் உள்ள புகைப்படம் ஒன்று இணையதளங்களில் எந்திரன் 2.0 புகைப்படம் என பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கபாலி படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதை தொடர்ந்து, ஷங்கர் படபிடிப்பு தளங்களில் படபிடிப்புகளில் கலந்து கொள்வோர் செல்போன் உபயோக்கிக்க கூடாது என கட்டளை போட்டிருந்தார். இவ்வளவு கெடுபிடி இருந்தும் எந்திரன் 2.0 புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|