S2S & வலைத்தமிழ்
DATE | TIMINGS |
---|---|
27 Oct 2021 | 5 PM (IST) |
சிறப்பு விருந்தினர்:
திரு. அ. முரளிபட்டதாரி
அறிவியல் ஆசிரியர்,
அரிச்சந்திரபுரம்,மன்னார்குடி ஒன்றியம்,
திருவாரூர்.
ஆசிரியரின் செயல்பாடுகள்:
1. 100 மூலிகைகள் கொண்ட மூலிகைத் தோட்டம், பள்ளியில் அமைத்து மாணவர்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். (இதுவரை 32 அரசுப் பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது)
2. பல அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
3. புத்தக வாசிப்பு இயக்கத்தின் மூலமாக மாணவர்களிடம் புத்தக வாசிப்பினை ஊக்குவித்து வருகிறார்.அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை பாடல்கள் , வில்லுப்பாட்டு மூலமாக கற்பிப்பதில் ஆர்வமுள்ளவர்.
4. சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் கற்க வேண்டியதன் அவசியத்தையும், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக வீதி நாடகத்தின் மூலம் விழிப்புணர்வை எற்படுத்தி வருகிறார்.
5. இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் குழந்தைப் பாடல்கள், அறிவியல் விழிப்புணர்வு கட்டுரைகள் சிற்றிதழ்களில் எழுதி வருகிறார்.
6. மாநில, மாவட்ட கருத்தாளராக தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.