சிறப்பு விருந்தினர்: இரா.முருகேஸ்வரி M.A, M.A, B.Ed தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சித்திவயல்,
சிவகங்கை மாவட்டம்.
நெறியாள்கை: லதா பாலாஜி, மாநகராட்சி பள்ளி -இடமலைப்பட்டிபுதூர், திருச்சி.
அறிமுக உரை: திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) குடியிருப்புகளுக்கு நேராகச்சென்றும், ஆன்லைன்வழியாகவும் கல்வி.
2) பெற்றோர்களுக்கு மாணவர் சார்ந்த வழிகாட்டல். உயர்கல்விக்கு வழிகாட்டல்.
3) கல்வி ரேடியோமூலம் தடையில்லா கல்வியை வழங்குவதில் எனது பங்களிப்பு மற்றும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் தனித்திறன்களை கல்வி வலையொலியில் பங்களிக்கச்செய்தல்.
4) மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவித்தல்
மற்றும் மாநில அளவிலான சிலம்பப்போட்டிகளில் பங்குபெறச்செய்து பரிசு பெறச்செய்துள்ளேன்.
5) பல்வேறு போட்டிகளுக்கு ஆன்லைன் வழி தயார்செய்து பரிசுபெறச்செய்துள்ளேன்.
6) அகல்விளக்கு யூடியூப் சேனல்மூலம் அனைத்து மனப்பாடப்பாடல்களை 6-8 வகுப்புகளுக்கு பதிவேற்றம் மற்றும் பாடப்பகுதிகள் பதிவேற்றம்.
7) 10&12&கல்லூரி முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி,வேலைவாய்ப்புக்கு வழிகாட்டல்.
8) கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தந்த குடியிருப்புகளில் படித்த பட்டதாரிப்பெண்களைக்கொண்டு டியூசன் ஏற்பாடு (மாலைநேரப்படிப்பு) செய்துள்ளேன்.