சிறப்பு விருந்தினர்: ந. கல்பனா, M.A B.Ed., ஆங்கில பட்டதாரி ஆசிரியை,
நகரவே மேல்நிலைப்பள்ளி, குமார் நகர், திருப்பூர் மாவட்டம்..
நெறியாள்கை: ஆ.இரா.வனஜா,
இந்து கார்னேஷன் நடுநிலைப்பள்ளி, மதுராந்தகம்.
அறிமுகவுரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் புரியும் வண்ணம் அனிமேஷன் வீடியோக்களாக பத்தாம் வகுப்பில் உள்ள ஆங்கில பாடங்களை மாற்றி கற்பித்து கடந்த 6 வருடங்களாக 100 சதவீத தேர்ச்சி அளித்தது.
2) புதிய பாட திட்டத்திற்கான புத்தக உருவாக்கத்தில் ஆங்கில பாடத்திற்கு வீடியோக்களை செய்து தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது. கல்வி தொலைக்காட்சியில் பங்கெடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை எடுத்தது.
3) மாணவர்களுக்கு பாடத்தை தவிர இதர செயல்பாடுகளாக என்சிஇஆர்டி இன் பாஷா சங்கம் நிகழ்ச்சியை நடத்தியது . பள்ளி மாணவர்களை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கெடுக்க செய்து உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுக்க செய்தது .
4) என்சிஆர்டி நடத்திய கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய அளவிலான போட்டியில் 2017ஆம் ஆண்டு தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது பெற்றமை.
5) மேலும் 2019 ஆம் ஆண்டில் புதிய தலைமுறையின் கனவு ஆசிரியர் விருது பெற்றமை.
6) ஆசிரியர்களுக்கு தொழில் நுட்ப அறிவை மேம்படுத்த டெக்னோ டீச்சர்ஸ் டீம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது.