சிறப்பு விருந்தினர்: ப.இனியசெல்வி எம்.ஏ,எம்.எட்
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமைஆசிரியர்,
ஊ.ஒ நடுநிலைப் பள்ளி.
நெறியாள்கை: திரு. அன்பழகன், பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) வட்டாரக் கல்வி அலுவலராக (உதவி தொடக்கக் கல்வி அலுவலர்) மூன்றரை ஆண்டுகள் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பணியாற்றியவர்.14 பட்டதாரி பணியிடங்களை உருவாக்கி ஆசிரியர் நலன், பணிப்பலன்களை முழுமையாக கிடைக்கச் செய்தவர்.
2) ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை (50 க்கும் மேல்) அதிகமாக்குதல்.
3) ஆண்டு தோறும் NMMS தேர்வில் மாணவரை தேர்ச்சி பெறச் செய்து, இதுவரையில் 18 மாணவர் பெறச் செய்தமை. அனைத்துவித போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்று மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் பரிசுகளைப் பெறச் செய்தல்.
4) கடந்த 7 ஆண்டுகளில், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட நன்கொடைகள் பெறப்பட்டு பள்ளியைப் புதுமைப் பள்ளியாக புனரமைக்கப்பட்டமை.
5) மாணவர்களின் சேமிப்புத் திறனை ஊக்குவித்து பாரத ஸ்டேட் வங்கியில் ரூ82000/- வரை சேமிக்கப்பட்டுள்ளது.
6) அனைத்து பாடங்களுக்கும் மன்றங்கள் செயல்பட்டு மாணவரின் படைப்பாற்றலை ஊக்குவித்தல்.
7) ஆசிரியர்கள் திங்கள் தோறும் சீருடையில் வருதல்.