வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி கதைகளத்துடன் களம் இறங்கப் போகிறாராம் எழில். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
மக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்ராதுரை படம் வெற்றிப்பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்க இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருகிறது. விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார் இயக்குனர் எழில்.
|