LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

இலக்கியங்களில் நம்பிக்கை! – வாதூலன்

விஞ்ஞானத்துக்கோ, தர்க்கத்துக்கோ அப்பாற்பட்ட பல நம்பிக்கைகள் - சகுனம் பார்த்தல், குறிகேட்டல், இடதுகண் துடித்தல், பல்லி சப்தம் போன்றவை மக்களை இயக்குகின்றன என்பது மறுக்க இயலாத உண்மை.


கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அசோகவனத்தில் வருத்தத்துடன் இருந்த சீதையைப் பார்த்து ராவணன் பணியுமாறு மிரட்டிவிட்டு, ""இவளை எப்படியாவது என் வசப்படுத்து'' என்று திரிசடையிடம்  ஆணையிட்டுச் செல்கிறான். அப்போது சீதைக்கு இடது கண் துடிக்கிறது. சீதை மனம் நடுங்கி, உடல் தளர்ந்து திரிசடையிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள்.


""முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள்

துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்

இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்'' (5101)


ராமரை முதலில் பார்ப்பதற்கு முன்தினம் சீதைக்கு இதேபோல் இடது கண் துடித்ததாம். திரிசடை சீதைக்கு இவ்வாறு ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.

""ஆயது தேரின் உன் ஆவி நாயகன்

ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;

தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்; என்

வாயது கேள்' என மறித்துக் கூறுவாள்'' (5100)


வீட்டில் பல்லியின் சப்தம் கேட்டாலே அது ஏதோ செய்தியை அல்லது

வருங்கால நிகழ்வை உணர்த்துகிறது என்பது மற்றொரு நம்பிக்கை.


தலைவனைப் பிரிந்த தலைவி, மாலை நேரத்தில் வீட்டில் சோர்ந்து கிடக்கையில் எங்கோ ஒரு பல்லியின் சப்தம் ஒலிக்கிறது. அதைக்கேட்டு தலைவி திடுக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கித் தொழுகிறாள். ""என் தலைவன் குறித்து நல்ல செய்தியாகச் சொல்'' என நடுங்கி வேண்டுகிறாள்.

அகநானூற்றுப் பாடல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது.


""மையல் கொண்ட மதனழி இருக்கையள்

பகுவாய்ப் பல்லி படுதோறும் பரவி,

நல்ல கூறு என நடுங்கிப்

புல்லென் மாலையொடு பெருங்கால் தானே''


பல்லி இந்த திசையில் ஒலித்தால், நன்மை என்றும், வேறு திசையில் வேறு விதமாக ஒலி எழுப்பினால் தீமை என்றும் பழந்தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.


18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் என்ற அத்வைத ஞானி பல நூல்களை இயற்றியுள்ளார். ஆண்டாளின் பாடலை அடியொற்றி (கனாக் கண்டேன் தோழி) "பல்லிப் பாட்டு' பாடியிருக்கிறார்.


""ஓடும் மனம் நம்மினுடன் உறவு செய்யுமாகில்

உள்ள நிலை மெல்ல உணர்வாகி வருமாகில்

நாடும் இடம் எங்கும் அறிவாகி விடுமாகி,

நல்ல குரல் நல்ல திசை சொல்லு சிறுபல்லி''


சின்னச் சின்ன ஊர்களில், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற சில நம்பிக்கைகள் ஓர் உந்து சக்தியாக இருக்கின்றன. குறிப்பாக தன் குழந்தைக்கு ஏதேனும் ஊறு நேராமலிருக்க வேண்டுமே என்று அச்சமடையும்போது மக்கள் சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். இதை நெல்லை மாவட்ட நாட்டுப்புறப் பாடல் ஒன்று எளிமையாக

விளக்குகிறது.


இதேபோல பிறந்த குழந்தையின் அழகைக்கண்டு ரசித்து விட்டால், அதற்கு நோய் வருமென்று தாய்மார்கள் நம்புகிறார்கள். காது குத்தினால், ஆயுளுக்குப் பாதுகாப்பு என நம்புகிறாளாம் தாய். இந்த நம்பிக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மத்திய ஆசியாவிலும் மற்றும் உலகெங்குமே இருக்கிறதாம். இதை நா.வானமாமலையின் நாட்டுப்புறப் பாடல் மூலம் படித்து மகிழலாம்.

மேற்சொன்ன இடதுகண் துடிப்பது, பல்லி சொல்வது, சகுனம் பார்ப்பது போன்றவைகளில் சிலருக்கு இன்றுவரை நம்பிக்கை இருந்து வருவதை மாற்றமுடியவில்லை.


by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.