|
|||||
பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு! |
|||||
பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி மனு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மற்றும் வெடிப்பதற்கும் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அதாவது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனைகளை விதித்தது. மேலும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தது. இந்த நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவில், தீபாவளியன்று காலையில் பட்டாசு வெடிப்பது தமிழநாட்டின் கலாச்சாரம் என்றும், இதனால் காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் பட்டாசுகளை வெடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் இந்த ஒரு திருத்தத்தை மட்டும் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனுவை தமிழக அரசு தரப்பு வக்கீலான வினோத் கண்ணா தாக்கல் செய்து உள்ளார். மேலும் மனு தொடர்பான விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை. |
|||||
by Mani Bharathi on 29 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|