LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆவி படங்களிலேயே முதல் யு சான்றிதல் பெற்ற ஓம் சாந்தி ஓம், ஐந்து ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையாம்...

முனி, காஞ்சனா, அரண்மனை, டார்லிங் ஆகிய திகில் படங்களைத் தொடர்ந்து அடுத்து வர இருக்கும் படம் ஓம் சாந்தி ஓம்.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், நீலம் உபாத்யாயா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், பைஜூ, வினோதினி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை டி.சூர்யபிரபாகர் இயக்கியுள்ளார்.  

சமீபத்தில் தணிக்கைக்கு சென்ற ஓம் சாந்தி ஓம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாம். இது வரையிலும் பேய், பிசாசு , படங்கள் என்றாலே படத்திற்கு யு/ஏ சான்றிதழே கிடைக்கும். ஆனால் இந்த படத்திற்கு தற்போது யு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.அருமைச்சந்திரன் கூறும்போது, ஐந்து ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை இது . இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தினர் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும்.

வழக்கமாக தணிக்கைத்துறையினர் திகில் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். இப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.  பேய், ஆவி சம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம் என்று அவர்களே பாராட்டிச் சொன்னார்கள்..

ஆவி என்றால் பயப்பட வேண்டாம் அது நம் முன்னோர்கள்தான். ஆவிகள் எல்லாம் பாவிகள் அல்ல. அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவை வருவது பயமுறுத்த அல்ல நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் படம் உருவாகியுள்ளது.

ஆவி பற்றிய அச்சம் , நகைச்சுவை இவற்றுடன் கல்வி வியாபாரமாவது, மருந்து கலப்படம் போன்ற சமூகக் கருத்தையும்  சொல்லியிருக்கிறோம். " என்கிறார் தயாரிப்பாளர்.

by Swathi   on 02 Feb 2015  0 Comments
Tags: Om Shanti Om   ஓம் சாந்தி ஓம்                 
 தொடர்புடையவை-Related Articles
ஆவி படங்களிலேயே முதல் யு சான்றிதல் பெற்ற ஓம் சாந்தி ஓம், ஐந்து ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையாம்... ஆவி படங்களிலேயே முதல் யு சான்றிதல் பெற்ற ஓம் சாந்தி ஓம், ஐந்து ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையாம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.