LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

பூக்கள் ....

அழகிருந்தும்

அறிவிருந்தும்

திறனிருந்தும்

செயலிருந்தும்

பணமிருந்தும்

படிப்பிருந்தும் ....


ஜாதகத்தால்

பாதகமான

முதிர்கன்னிகளின்

எண்ணிக்கை தெரியுமா ....


பலகாரத்தோடும்

இனிப்போடும்

கையில்

தேனீர் தட்டோடும் ....


அன்றைக்கு மட்டுமே

தலை நிறைய

பூக்கள் சுமக்கிற

பூக்கள் இன்னும்

எத்தனை தெரியுமா ...


ஆசாபாசங்களை

அடிமனது ஆசைகளை

உள்ளார்ந்த உணர்வுகளை

வாசற்படிகளோடு

கழற்றி விட்டு

புகுந்த வீட்டில்

கடிவாளம் பூட்டப்பட்ட

நம் இனப்பெண்கள்

இன்னும்

எத்தனைப்பேர் தெரியுமா ....


இறகொடித்த

கிளிகளாய் ....


சிறகொடித்த

பறவைகளாய் .....


கால் இழந்த

குதிரைகளாய் ....


வாழப்போன இடத்தில்

கண்ணீர் சிந்திக் கூட

சுதந்தரமில்லா


இல்லற விலங்கு மாட்டிய

மனிசிகளின்

எண்ணிக்கை தெரியுமா ....


இன்னும்

சில நாட்களில்

மகளிர் தினம் ...


அது கடந்து

மங்கையர் தினம் ....


அதன்பிறகு

அன்னையர் தினம் ...


அவர்கள்

கிடக்கிறார்கள் ....


அந்த

முதிர்கண்ணிகள் ....


அன்றைக்கு மட்டுமே

பூக்கள் சுமக்கிற

பூக்கள் ....


கடிவாளம் பூண்ட

நம் இனப்பெண்கள் ....


இல்லற விலங்கு

மாட்டிய மனிசிகள் ...


அவர்கள்

கிடக்கிறார்கள் .....


அதுதான்

சகிப்புத்தன்மை

வளர்த்துக்கொண்டு

விட்டோமே

பிறகென்ன ...


“ வாழ்க்கையென்றால்

ஆயிரம் இருக்கும் “

வாழப்பழகிவிட்டோமே

அப்புறமென்ன ....


புறையோடிய

புண்களோடு

நடந்து பழகிக் கொண்டோமே

பிறகென்ன .....


அவர்கள்

கிடக்கிறார்கள் ....


பெண்மையை

கொண்டாட

நமக்கு இன்னும்

நிறைய தினங்கள் உண்டு ...


அவர்கள்

கிடக்கிறார்கள் .....

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.