LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

 

நாட்டுப்புறப் பாடகி கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் முத்தன் - கருப்பியம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் கருப்பாயி. கொல்லங்குடியில் கிராமியப் பாடல்களைப் பாடி அந்த ஊர்களில் பிரபலமாக இருந்தார். தனது ஊர்ப் பெயரே அவரது பெயருடன் சேர்ந்து அடையாளமாக மாறியது. பின்னர் வானொலியில் தன் பணியைத் தொடங்கினார்.

அங்குப் பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இவரது திறமையை அறிந்து நடிகரும், இயக்குநருமான ஆர் பாண்டியராஜன் தான் இயக்கி, நடித்த 'ஆண் பாவம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்துப் புகழ் பெற்றார். தொடர்ச்சியாக பாண்டியராஜன் நடித்த படங்களான 'ஏட்டிக்கு போட்டி', 'கோபாலா கோபாலா', 'கபடி கபடி', 'ஆண்களை நம்பாதே' போன்ற படங்களிலும் நடிக்க வைத்தார். 
கடைசியாக சசிகுமார் நடித்த 'காரி' படத்தில் நடித்தார். வயது மூப்பால் கலையுலகை விட்டு விலகினார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இவருக்குக் கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார். இவரிடம் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று உடனடியாகப் பட்டா வழங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.

வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கருப்பாயி ஜூன் 14 காலை 8 மணியளவில் காலமானார். 

 

 

by hemavathi   on 15 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம் நாமக்கல் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய செயலி மூலம் உணவு விநியோகம்
காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையோடு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம்
கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது கே.எம்​.​காதர் மொய்தீனுக்கு இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச்  சிறப்பு இணையதளம் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச் சிறப்பு இணையதளம்
கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள்
விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம் விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்
விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.