LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அந்நியச் செலாவணி மோசடி: விஜய் மல்லையா சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரூவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் உள்ள  13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு அவர் வெளிநாடு தப்பிச் சென்று தற்போது லண்டனில் இருக்கிறார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

இது தொடர்பான வங்கிகளின் வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். 

முன்னதாக 1996 முதல் 1998ம் ஆண்டு வரை நடைபெற்ற பார்முலா ஒன் உலக கார் பந்தயப் போட்டியின் தனது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சின்னத்தை விளம்பரப்படுத்த பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.27 கோடியை மல்லையா அளித்தது தொடர்பான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும், அந்நியச் செலாவணி பரிமாற்றச் சட்டத்தை மீறியும் பிரிட்டன் நிறுவனத்துக்கு தொகை பரிமாறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. 

இதில் மல்லையா நேரில் ஆஜராக இரண்டு முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜர் ஆகாததால் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் மல்லையா வெளிநாடுக்கு தப்பிச்சென்று விட்டார்.

இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்தியாவில் உள்ள சிறைகளில் போதிய வசதிகள் இல்லை என மல்லையா கூறியிருந்தார். இதையடுத்து மல்லையாவை கைது செய்தால், அவரை அடைக்கும் சிறையின் புகைப்படங்களை தாக்கல் செய்யுமாறு இந்தியாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி கடந்த ஜூலை 31ம் தேதி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் பெங்களூரூ சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.