பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று அன்னிய நேரடி முதலீட்டு வரம்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொலைத் தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டது. இதன் படி தற்போது தொலைத்தொடர்பு துறையில் அந்நிய முதலீட்டிற்கான அளவு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டும். இதனால் அரசுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்றொரு முக்கிய துறையான இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டிற்கான உச்சவரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பெட்ரோலிய துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரையிலும், பாதுகாப்பு துறையில் 26 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்படுவதால் மாநிலங்களில் கலை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை அளிக்க உள்ளது. மத்திய அரசு இந்த முடிவு தொழில் துறை நிறுவனங்கள் இடையே
பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
|