LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

முஷாரப் கைது ! இரண்டு நாள் வீட்டு காவலில் அடைப்பு !

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் நேற்று கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார். 2008ல், நடந்த நாடாளமன்ற தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், அதிபர் பதவியிலிருந்து விலகினார். இவர் ஆட்சியில் இருந்தபோது, போதிய பாதுகாப்பு இல்லாததால் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது, அறுபது நிதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டது, தேவையில்லாமல் அவசர நிலை பிறப்பித்தல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இருந்து அவர் தப்பிக்க துபாய் மற்றும் லண்டனில் இவர் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.அடுத்த மாதம், பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக, கடந்த மாதம் நாடு திரும்பினார்.நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு செய்திருந்தார்."அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது' என, வழக்கறிஞர்கள் பலர், தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தனர். இதையடுத்து, தேர்தல் தீர்பாயம், முஷாரப்பின், நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்து விட்டது. இதனால் இவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமீனை நீடிக்க கோருவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்த முஷாரபை கைது செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் , முஷாரப் தந்து ஆதரவாளர்களுடன், அங்கிருந்து வெளியேறினார். முஷாரப் தனது பண்ணை வீட்டில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாகிஸ்தான் போலீசார், அவரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், முஷாரப்பை ஆஜர்படுத்தக்கூறிய, மாஜிஸ்திரேட், அவரை இரண்டு நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், முஷாரப்பை கொல்ல திட்டமிட்டுள்ளன. எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே, பாதுகாப்பு கருதி அவரை சிறை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை வீடு துணை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 20 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.