கணிதம் மற்றும் அறிவியல் துறையில் ஆய்வி மேற்கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு, அமெரிக்காவின் மிக பெரிய நிறுவனமான, சிமென்ஸ் உயரிய விருதை அளித்துள்ளது.
ஆண்டுதோறும், சிமென்ஸ் நிறுவனம், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது, நான்கு இந்தியர்கள் உட்பட 13 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த படி, கணிதத் துறையில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர், கண்ணன் சவுந்தர்ராஜனுக்கும், பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர், ராஜீவ் அலூருக்கு கணித துறைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஏல் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் செந்திலுக்கும்,கணினி அறிவியலில் கணிதத்தின் பயன்பாடு பற்றிய பாடப்பிரிவில் வல்லவரான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர் சலீல்வதானுக்கும் அறிவியல் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
|