LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மாவட்டம்தோறும் 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் இலவச மனனப் பயிற்சி

மாணவப்பருவத்திலேயே தனிமனித ஒழுக்கம், தலைமைப்பண்பு , அறச்சிந்தனை முதலியனவற்றை வளர்த்தெடுக்கும் பொருட்டும், இளம் பருவத்தில் பள்ளிப்பாடத்துடன் சேர்த்து திருக்குறளை முழுமையாகக் கற்றுத்தேர்ந்து, அரசு நடத்தும் 1330 குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் "திருக்குறள் முற்றோதல்" போட்டியில் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் அரசு வழங்கும் ரூபாய் 10000 பரிசுத்தொகை பெறவும் வழிகாட்ட, ஊக்கப்படுத்த  "உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" தொடங்கப்பட்டது.

திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும் என்ற நோக்கில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 1330 திருக்குறள் மனனப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொடுத்து மாணவர்களை உருவாக்கி அனுபவம் பெற்ற கவனகர்கள் , கற்றுக்கொடுக்கும் உத்திகள் தெரிந்த திருக்குறள் ஆளுமைகள் ஐந்துபேர் முதல்கட்டமாக கைகோர்த்து இப்பயிற்சியை வழங்கவிருக்கின்றனர்.இதன் தொடக்கமாக மாவட்டத்திற்கு 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முற்றோதல் பயிற்சி தொடங்கப்படவிருக்கிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி மாணவர்களும் , வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்களும் திருக்குறள் ஆளுமைகளை/பயிற்சியாளர்களை பயன்படுத்தி திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறோம்.

மாவட்டத்திற்கு 100 பேருக்கு என்ற இலக்குடன் தொடங்கும் இத்திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்திற்கு 1000 பேர் என்று விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"நிற்க அதற்குத் தக" என்ற  குறள் வாசகத்துடன் தொடங்கப்பட்டுள்ள உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், உலகம் முழுதும் திருக்குறள் முற்றோதல் முடித்தவர்களை, நாடு வாரியாக, மாவட்ட வாரியாக வகைப்படுத்தி www.KuralMutrothal.org இணையதளத்தில் தொகுத்து, அவர்களின் தொடர் வெற்றியை உறுதிப்படுத்த தன்னம்பிக்கை பயிற்சி , ஆங்கிலப் பயிற்சி, கல்வி வழிகாட்டல், வேலைவாய்ப்பு வழிகாட்டல் என்று பல்வேறு பயிற்சிகளை வழங்கவும், தொழில்முனைவோராக வளர பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்தித்தரவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக வலைத்தமிழ் திரு.ச.பார்த்தசாரதி, அரசு மற்றும் பயிற்றுநர் ஒருங்கிணைப்பை வள்ளுவர் குரல் குடும்பம் ஒருங்கிணைப்பாளர் திரு.சி.ராஜேந்திரன் IRS (ஓய்வு), அரசுப்பள்ளிகள் ஒருங்கிணைப்பை Service 2 Society நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம், புரவலர்கள் ஒருங்கிணைப்பை தமிழ் ஆர்வலர் திரு.கொழந்தைவேல் இராமசாமி (வாசிங்டன் டிசி), திருக்குறள் ஆர்வலர்கள் திரு.க.செங்குட்டுவன் , திரு.செந்தில் துரைசாமி (டெக்ஸாஸ்) ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

உலகத் தமிழர்களை உங்கள் குழந்தைகளுக்கு பயிற்சிபெறவும், உங்கள் ஊர் அரசுப்பள்ளிக்கு இந்த இலவசத் திட்டத்தை கொண்டுசெல்லவும் அன்போடு அழைக்கிறோம்.

இத்திட்டத்தில் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் , மேரிலாந்து , அமெரிக்கா அமைப்பு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 புத்தகங்கள் வீதம் ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்களை (திருக்குறள் முனுசாமி உரை) வழங்கவும், இவ்வாண்டு அதை மாவட்டத்திற்கு 1000 புத்தகங்கள் என்று 40000 புத்தகங்களை இலவசமாக வழங்க உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்துடன் இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

www.KuralMutrothal.org  | E-Mail: Kural.Mutrothal@gmail.com | 

 

by Swathi   on 22 Feb 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.