LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

நட்பு ...

தற்போதெல்லாம்

அடிக்கடி

திருக்குறளில்

தஞ்சமடைகிறது

மனசு ...


அந்தவகை

நட்புக்கள்

வளர்ந்து பெருகலின்

தேய்ந்து குன்றலே மேல்

என்கிறார் வள்ளுவர் ..


தீ நட்பு

கூடா நட்பு

இவைகளை நீட்டி

என்னை அரவணைத்துக்

கொள்கிறார் பெருந்தகை ...


என்

மனம் ஒட்டிய

வடுக்களைக் கலைந்து

அவர்கள் முள்

“ வாளாதிரு “ என்கிறார் ...


உலகம் அப்படித்தான்

உன் இயல்புத்தமை

மாறாதிருக்கட்டும்

அன்புக் கட்டளையிடுகிறார் ...


நட்பை

கொன்றவர்களுக்கும்

விலை மாதுக்களுக்கும்

அதிக வேற்றுமைகள் இல்லை

என்கிறார் ...


நல்லவர்களோடும்

ஒத்த மனத்தோடும்

கிடைத்த நடப்புக்களை

“ சாகும் வரை

விட்டுவிடாதே “

அறிவுறுத்துகிறார் ...


வள்ளுவரோடு

நட்புக் கொண்டபின்

அதிகக் கவனமாயிருக்கிறேன் ..


நடக்கிற

நடப்புக் கொலைகளுக்கு

நான் காரணமாகாதிருக்க வேண்டும் ...


மனது

ஒரு மாயவலை

பின்னிக்கொண்டு

கூட்டத்திற்குள்ளும்

தனித்து நிற்க ஆரம்பித்திருக்கிறது ...


யாரோடும்

எளிதாய்

நெருங்கிவிட முடிவதில்லை ...

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
24-May-2012 10:41:12 k.hemavathy said : Report Abuse
இந்த கவிதைகளை படிக்கும் நேரம் இதயம் ஆனந்தம் அடைகிறது .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.