LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

தனிநாயகம் அடிகளாருக்கு நினைவு தின விழா!

தமிழுக்குத் தகை சேர்த்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் நினைவு விழாவினை இன்று மாலை சிறப்பாக்க் கொண்டாடினர் சிங்கப்பூர் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர். இளைஞன் ரோஷன் பரத் இனிய தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய. நிகழ்ச்சியில் உமா தேவி சாந்தகுமாரும், பிரபஞச குடில் நடனக் குழுவினரும் பல்சுவை நடன்ங்கள் அளித்தனர்.

நிகழ்ச்சித் தலைவர் திரு.தமிழ்மறையான் தன் வரவேற்புரையில் அன்றைய தமிழ் முன்னோடிகளையும், தமிழ் வளர்த்த அன்றைய அமைப்புகளையும் நினைவு படுத்தினார். சிறப்பு விருந்தினர் தமிழர் பேரவை தலைவர் வே.பாண்டியன், வள்ளுவச் சிறப்புகளையும், அதன் வழி நின்று தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகளாரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்..செல்வி மோனாலிசா, அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும், தமிழ்ப் பணிகளையும் தெளிவாகக் கூறினார்.

சிறப்புப் பேச்சாளர் முனைவர் இரத்தின வேங்கடேசன், தனிநாயக அடிகளார் பேசிய பேச்சுகளிலிருந்தும்,, அவர் கையாண்ட தமிழ்க் குறிப்புகளிலிருந்தும் கருத்தறிந்து கூறியது சுவையாக அமைந்த்து. அகநானூற்றுக் காதல் கதை, சங்க காலப் புலவனின் புலமைத்தனம்,தமிழின் தொன்மையை உணர்த்த அடிகளார் கையாண்ட வழிகள் என பல தகவல்களை முனைவர் அழகுற சேகரித்துத் தந்தார். தனிநாயக அடிகளார் உலகப் புகழ் திருக்குறளை எடுத்தாண்ட விதம் தமிழுக்கு அவர் செய்த சிறப்பு .எனக் கூறிய அவர், கிறிஸ்துவராக இருந்தாலும், தமிழுக்கு அடிமையானவர் அடிகளார், சங்க கால நூல்களில் திளைத்தார். சங்க இலக்கியங்கள் தமிழ் உணர்விற்கும், தமிழ் வாழ்விற்கும் வழி காட்டியவை என்றார். இலக்கண நூலான தொல்காப்பியத்தின் புதைந்து கிடக்கும் வாழ்வியல் தத்துவங்களை மக்களுக்கு விளக்கினார். நெல்லிக்காய் மூட்டைகளாக இருக்கும் தமிழ் மக்கள், ஒன்றிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் – என மன நிறைவான உரையை முனைவர் இரத்தின வேங்கடேசன் முடித்தார். --ஏபிஆர்.

by Swathi   on 29 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.