LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

தனிநாயகம் அடிகளாருக்கு நினைவு தின விழா!

தமிழுக்குத் தகை சேர்த்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் நினைவு விழாவினை இன்று மாலை சிறப்பாக்க் கொண்டாடினர் சிங்கப்பூர் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர். இளைஞன் ரோஷன் பரத் இனிய தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய. நிகழ்ச்சியில் உமா தேவி சாந்தகுமாரும், பிரபஞச குடில் நடனக் குழுவினரும் பல்சுவை நடன்ங்கள் அளித்தனர்.

நிகழ்ச்சித் தலைவர் திரு.தமிழ்மறையான் தன் வரவேற்புரையில் அன்றைய தமிழ் முன்னோடிகளையும், தமிழ் வளர்த்த அன்றைய அமைப்புகளையும் நினைவு படுத்தினார். சிறப்பு விருந்தினர் தமிழர் பேரவை தலைவர் வே.பாண்டியன், வள்ளுவச் சிறப்புகளையும், அதன் வழி நின்று தமிழ் வளர்த்த தனிநாயகம் அடிகளாரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்..செல்வி மோனாலிசா, அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகளையும், தமிழ்ப் பணிகளையும் தெளிவாகக் கூறினார்.

சிறப்புப் பேச்சாளர் முனைவர் இரத்தின வேங்கடேசன், தனிநாயக அடிகளார் பேசிய பேச்சுகளிலிருந்தும்,, அவர் கையாண்ட தமிழ்க் குறிப்புகளிலிருந்தும் கருத்தறிந்து கூறியது சுவையாக அமைந்த்து. அகநானூற்றுக் காதல் கதை, சங்க காலப் புலவனின் புலமைத்தனம்,தமிழின் தொன்மையை உணர்த்த அடிகளார் கையாண்ட வழிகள் என பல தகவல்களை முனைவர் அழகுற சேகரித்துத் தந்தார். தனிநாயக அடிகளார் உலகப் புகழ் திருக்குறளை எடுத்தாண்ட விதம் தமிழுக்கு அவர் செய்த சிறப்பு .எனக் கூறிய அவர், கிறிஸ்துவராக இருந்தாலும், தமிழுக்கு அடிமையானவர் அடிகளார், சங்க கால நூல்களில் திளைத்தார். சங்க இலக்கியங்கள் தமிழ் உணர்விற்கும், தமிழ் வாழ்விற்கும் வழி காட்டியவை என்றார். இலக்கண நூலான தொல்காப்பியத்தின் புதைந்து கிடக்கும் வாழ்வியல் தத்துவங்களை மக்களுக்கு விளக்கினார். நெல்லிக்காய் மூட்டைகளாக இருக்கும் தமிழ் மக்கள், ஒன்றிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் – என மன நிறைவான உரையை முனைவர் இரத்தின வேங்கடேசன் முடித்தார். --ஏபிஆர்.

by Swathi   on 29 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.