|
|||||
கஜா புயல் பாதிப்பு: மறுசீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்கள் உதவ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்! |
|||||
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்களின் நிதி உதவியை வேண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, ரூ.1000 கோடி நிதி உதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ வேண்டும். தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். நன்கொடையாளர்கள், https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற வெப்சைட் முகவரியில் வங்கி, டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். பொதுமக்கள் தங்களது நன்கொடையை கிராஸ் செய்யப்பட்ட காசோலை, வங்கி வரைவோலை மூலம் கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்: அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் முகவரி: dspaycell.findpf@tn.gov.in Electronic Clearring System(ECS) மூலம் வங்கிக்கு நேரடியாக அனுப்ப வேண்டிய விவரம்: வங்கி பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். |
|||||
by Mani Bharathi on 21 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|